யாழ்ப்பாணம் (Jaffna) – கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத
நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கான காரணம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளியின் வீட்டின் மீதே
இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம்
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

