பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் உயர்நீதிமன்றில் இன்றைய தினம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தால், இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அந்த சங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனம் தற்போதும் 1,350 ரூபாய் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்
தற்போதுள்ள வாழ்க்கை செலவிற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அன்றாடம் 3 வேளை உணவை கூட பூர்த்தி செய்ய முடியாதிருப்பதுடன், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத உச்ச வறுமையை எட்டியுள்ளார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, 200 வருட காலமாக குறைந்த ஊதியத்தை பெற்று வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கான மதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
அவர்களின் வாழ்க்கை செலவை ஈடு செய்யக் கூடியதும் உழைப்பிற்கான மதிப்பை நிர்ணயித்துக் கொள்ளக் கூடியதுமான ஒரு வேதன உயர்வை கோரி தங்களது சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் குறிப்பிட்டுள்ளது.