பருத்தித்துறை மரக்கறிச்சந்தை மீண்டும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி
மேல்த்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகரசபையினால் புதிதாக மரக்கறிச் சந்தை மீன் சந்தை வீதியில் அமைக்கப்பட்டு
இடம் மாற்றப்பட்டிருந்தது.
அதன்படி, புதிய மரக்கறிச் சந்தை போதிய வசதிகளற்ற நிலையில் அமையப் பெற்றுள்ளதுடன் வியாபார நடவடிக்கைகள் போதாமையாக இருப்பதாக வியாபாரிகள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நவீன சந்தை
இந்நிலையில் பெய்து வரும் கனமழை வெள்ளம் புதிய மரக்கறிச் சந்தை வளாகத்தில் நிரம்பி வழிந்து பவுசர் மூலமாக மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டது.
இதனையடுத்து, மரக்கறி வியாபாரிகள் மரக்கறிச் சந்தையை நவீன சந்தை பழைய கட்டடத்திற்கு தாமாகவே சென்று வியாபாரத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

