கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இறுதிச் சடங்கு
இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கர்தினால் வத்திக்கானுக்குப் புறப்பட்டுள்ளார்.

அதாவது, மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மேலும், பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

