தமிரழசுக் கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா செயற்படுவார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தின் இடைவெளியின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் மாவை கட்சி தலைமை பொறுப்பை எடுத்த போது சம்பந்தனை நாங்கள் அரசியல் குழு தலைவராக நியமித்திருந்தோம்.
இதனடிப்படையில், தற்போது எஞ்சிய காலத்திற்கு சி.வி.கே சிவஞானம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் குழு தலைவராக மாவை செயற்படுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/MjpoWIKo0tw