முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கையில்
வாக்காளர்கள் சுமூகமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் கட்சி ஒன்று தனது துண்டு பிரசுரங்களை முள்ளியவளை பொலிஸ்
பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீதியில் தூக்கி வீசிய சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது.
சுமூகமான முறையில் வாக்களிப்பு
இந்த சம்வத்தினை தொடர்ந்து குறித்த கட்சியின் தேர்தல் பரப்புரை துண்டு
பிரசுரங்களை பொலிஸார் பொறுக்கி அப்புறப்படுத்தியுள்ளார்கள்.
மேலும், மாவட்டத்தின் ஏனைய இடங்களில் மக்கள் சுமூகமான முறையில் வாக்களித்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.