கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி
ஹரினி அமரசூரிய, மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை
நாகதம்பிரான் ஆலயத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், நேற்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை சென்று விசேட
வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள்
நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச்
சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார்.
விசேட பூசை வழிபாடு
ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும்
வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில்
பிரதமர் பக்திபூர்வமாகப் பங்கேற்றார்.
வழிபாடுகளைத் தொடர்ந்து, மிகவும் பழமை
வாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றுப் பின்னணி, ஐதீகங்கள் மற்றும் ஆலயத்தின்
சிறப்புக்கள் குறித்து பிரதமர் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.

