மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
தமது இரண்டு
நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்காக நேற்றையதினம்(5) வழங்கியுள்ளனர்.
உலர் உணவுப் பொருட்கள்
இந்த உலர் உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலை
அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டு பின்னர் அவை மட்டக்களப்பு கச்சேரியில்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ரத்நாயக்க உள்ளிட்ட
ஏனைய உத்தியோதர்களும் பங்கு பற்றியிருந்தனர்.







