முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கவுள்ள தனியார் பேருந்து சங்கத்தினர்..!

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத
அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம்
தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக
வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று(27) காலை இடம்பெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை
அடுத்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் தனிதார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தரப்பினரிடையே குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.

சட்டவிரோத சேவையை

இதையடுத்து சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார்
வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.

வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கவுள்ள தனியார் பேருந்து சங்கத்தினர்..! | Private Bus Associations Strike Blocking North

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துக் கூறிய வடக்கு மாகாண தனியார்
போக்குவரத்து சேவை சங்க தலைவர், இன்று காலை யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிளிநொச்சி சாலைக்கு
சொந்தமான பேருந்து ஒன்று சாலை முகாமையாளரின் உத்தரவுக்கமைய சட்டவிரோத
சேவையை வவுனியா நோக்கி முன்னெடுக்க முயன்றது.

இதை அவதானித்த நாம் குறுத்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டித்து அதை நிறுத்துமாறு
வலியுறுத்தினோம். ஆனால் இலங்கை போக்குவரத்து சபையினர் அடாத்தாக சேவையை முன்னெடுக்க முயன்றனர்.

தனியார் போக்குவரத்து சேவையை முடக்க

ஏற்கனவே இச்சட்டவிரோத செயற்பாடு  குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து
அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம்
முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்.

ஆனாலும் இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையே காணபடுகின்றது.

வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கவுள்ள தனியார் பேருந்து சங்கத்தினர்..! | Private Bus Associations Strike Blocking North

அத்துடன்
இலங்கை போக்குவரத்து சபை அடாத்தாக சட்டத்துக்கு முரணாக செயற்படுவதுடன் தனியார் போக்குவரத்து
சேவையை முடக்கவும் முயன்று விபத்துக்கள் ஏற்படுவதற்கும், முரண்பாடுகளை
உருவாகுவதற்கும் வலிந்து இழுக்கின்றனர்.

எனவே இவ்வாறான இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும்
சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை
நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும்
எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மகாணம் தழுவிய ரீதியில் முழுமையான சேவை
முடக்கல் போராட்டம் ஒன்றை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.