Courtesy: kapil
சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய
காவல்துறையின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில்
ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அந்த பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து
யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூல பதிவு
இந்நிலையில், வவுனியாவிலும் வட்டி மற்றும் போதைப் பொருள் விற்பனை,
மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு
மிரட்டப்பட்டு சொத்துக்களை பெற்றமை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து
சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் காவல்துறையினர் சிலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வவுனியாவில் அதிகரித்து வரும் வட்டி மற்றும் போதைப் பொருள்
மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை தமக்கோ அல்லது காவல்துறையினருக்கோ வழங்கினால்
சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

