யாழ் பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர்களால் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (04.02.2025) யாழ் பல்கலைக்கழக பிரதான வாயிலின் முன்பாக இடம்பெற்று வருகின்றது.
கறுப்புக் கொடி
இதன்போது தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பல்கலைக்கழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.
நாட்டின் பல பகுதிகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கில் பாரிய போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், யாழ் நல்லூர் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்துடன் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகள் – பிரதீபன்
https://www.youtube.com/embed/oih4_KD_IP0