றாகமை பிரதேசத்தில் இன்று(04) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
றாகமை, பட்டுவத்தை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியொன்றில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கணேமுல்லை சஞ்சீவவின் சகா
உயிரிழந்த நபர் பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனாக இருந்து உயிரிழந்த கணேமுல்லை சஞ்சீவவின் சகா என்று தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

