கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்புப் பெருநாளுக்கு மறுதினமான செவ்வாய்க்கிழமை(01.04.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் ஊடகப் பிரிவு இது தொடர்பான அறிவித்தலை இன்று(29) வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், விடுமுறை தினத்திற்கான பதில் பாடசாலையானது 05.04.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்
அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் வழமைபோல்
நடைபெறுமெனவும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.