செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது, இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் என மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்கள் 20% இனால் குறைக்கப்பட்டு கட்டண திருத்தம் ஒன்று செய்யப்பட்டது.
குறைந்துள்ள இலாபம்
எனினும், இந்த திருத்தம் உண்மையான செலவுகளை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில் இன்னும் தெளிவின்மை உள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
2024 இல் மின்சார கட்டணங்கள் இரு முறைகள் திருத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் 21.9% மற்றும் ஜூலை மாதத்தில் 22.5% இனால் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டணக் குறைப்பின் காரணமாக, வருடத்தின் இரண்டாவது பாதியில் மாதாந்த இலாபம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை மின்சாரசபை 2024 இல்148.6 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.