கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் சூழலியலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபரொருவர் அண்மையில் காணொளியொன்றை முகப்புத்தகத்தில் வெளியிட்டு இருந்தார்.
குறித்த காணொளியில் அவர் தனது பிள்ளைகள் உணவு பொருட்களுடன் செல்ல றீ(ச்)ஷாவிற்குள் தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பில் றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தனது தரப்பு கருத்தை வெளியிட்டிருந்தார்.
அதில் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய பொதுவான முக்கிய சட்டத்திட்டங்கள் குறித்தும் அவர் தெளிவாக பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த சம்பவத்தின் பின்னணி, குற்றச்சாட்டை முன்வைத்த நபரின் கருத்துக்கள் தொடர்பிலும் மற்றும் றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் முக்கிய சட்டத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செ்யதிக்கு அப்பால் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/tlCKV9_bRmk

