முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதரீதியாக பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சி: குற்றஞ்சாட்டும் சாணக்கியன்

மட்டக்களப்பு(Batticaloa) மாவட்ட அரசாங்க அதிபர் மதரீதியாக ஒரு பாரிய பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்(Shanakiyan Rasamanickam) குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மட்டிக்கழி பகுதியில் ஆண்டு தோறும் நடைபெறும் துரோபதை அம்மன் ஆலயத்தின் மஞ்சள் குளிக்கும் இடமாக அமைந்துள்ள காணி ஒன்றில் மீன்வாடி அமைப்பதற்கு நபர் ஒருவருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காணி மட்டிக்கழி மக்களால் காலாகாலமாக பாதுகாத்து வந்த நிலையில் குறித்த காணியே தனியார் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதை அடுத்து கிராம மக்களுக்கும் தனிப்பட்ட நபருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டுள்ளது.

மதரீதியாக அவதூறு 

குறித்த காணி விடயம் தொடர்பாக கிராம மக்கள் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளுடன் கலந்துரையாடி பல முனைப்புகளை மேற்கொண்ட போதிலும் பலனளிக்கவில்லை.

மதரீதியாக பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சி: குற்றஞ்சாட்டும் சாணக்கியன் | Religious Insults In Batticalo Agitated People

இதன் காரணம் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற ரீதியில் தங்களது சைவ விழுமியங்கள் தொடர்பான விடயங்களை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன் போது கிராம மக்களுக்கு ஆதரவாக பேசிய அரசாங்க அதிபர் திடீரென மாறி அவர்களுக்கு எதிராக பேசியதும் அவர்களுடைய மதம் சார்ந்த அடையாளங்களை அவதூறு வார்த்தை பிரயோகம் மேற்கொண்டு உள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

சாணக்கியனின் கவனத்திற்கு 

காலாகாலமாக ஆலய விழுமியங்களுக்காக பாவிக்கப்பட்ட குறித்த காணியினை மீண்டும் தங்களது ஆலய விழுமியங்களுக்காக வழங்க வேண்டும் என்றும் குறித்த காணி விடயம் தொடர்பாக சரியான தீர்மானங்கள் கிடைக்காத பட்சத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மதரீதியாக பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சி: குற்றஞ்சாட்டும் சாணக்கியன் | Religious Insults In Batticalo Agitated People

குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர்களுக்கு அறிவித்திருந்த போதிலும் அவர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மிக விரைவில் தங்களுக்கான தீர்வினை பெற்று தருவதாக உறுதி அளித்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபர் மதரீதியாக ஒரு பாரிய பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.