முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி கிடைக்க சகல தரப்பும் முன்வர வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன் தெரிவித்துள்ளார்.

அனைத்து உலக காணாமல் ஆக்கப்பட்டோரது தினத்தினை முன்னிட்டு நேற்றையதினம் (30.08.2024) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு
போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“உலகிலேயே காணாமல் ஆக்கப்படுவது என்பது மிகப்பெரிய குற்றமாகும்.

துயரச்சம்பவம்

தமது
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல், தமது பிள்ளைகள் உயிரோடு
வருவார்கள் என்ற ஏக்கத்துடன் பெற்றோர் கடந்த ஐந்து வருடங்களாக தமது போராட்ட
வடிவங்களை மாற்றி மாற்றி தமது பிள்ளைகளின் படங்களோடு வீதி வீதியாக
திரிகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கை | Request Regarding People Who Disappeared

இதனை சர்வதேச சமூகமும், இலங்கை அரசாங்கமும் கண்டுகொண்டு பாதிக்கப்பட்ட
உறவுகளுக்கு ஒரு நீதியை நிலை நாட்ட வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் சார்பாக
இந்த இடத்தில் வலியுறுத்துகின்றோம்.

இந்த தாய்மார் தமது பிள்ளைகளை தேடி தேடி இறந்து போன வரலாற்று சம்பவங்கள்
காணப்படுகின்றன. இது ஒரு துயரச்சம்பவம்.

தமிழ் தேசியம் பேசும் கட்சிகள்

இனி இருக்கின்ற தாய்மார்களாவது தமது
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை தெரிந்து கொள்வதற்கும், நீதியை
நிலைநாட்டுவதற்கும் சகல தரப்புக்களும் முன்வர வேண்டும் என இந்த இடத்தில்
கோரிக்கை முன்வைக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கை | Request Regarding People Who Disappeared

தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளும் இந்த
நேரத்தில் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவற்ற காலப்பகுதியில் இருந்து கடந்த 15 வருடங்களாக
தமிழ் மக்களுடைய வாக்குகளை அபகரித்து, தென்னிலங்கையில் உள்ள அரசாங்கத்தின்
மீது நீங்கள் வைத்துள்ள அக்கறையையும், அந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு
மேற்கொள்கின்ற அக்கறையையும், வாக்களித்த நமது மக்களுடைய உரிமைகளிலும் நலன்
சார்ந்த விடயங்களிலும் காட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.