நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க எனக்கு சந்தர்ப்பம் தர வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (14) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
திடீர் மின்தடை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா?
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற
பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.
இந்த மின் துண்டிப்பு குறித்து இந்த சபையில் அமைச்சர் விளக்கம் அளிக்க
வேண்டும். பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு
ஆளாகி வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி
வருகின்றனர் .
சூரிய சக்தி உற்பத்தி
இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம்
இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இது தொடர்பில்
அரசாங்க தரப்பில் பதில் வழங்க வேண்டும்.
புதிய உற்பத்தி ஆலைகளைத் திறந்து
சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும்
குரங்குகள் மீது பழி போட வேண்டாம்” என சஜித் பிரேமதாச கோரிக்கை
விடுத்தார்.