இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் பணியாற்றும் 83
ஊழியர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதால் அவர்களது
குடும்பங்களின் வாழ்க்கை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.
குறித்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில், பலமுறை நிறுவன மேலதிகாரிகளிடமும்,
தொழிலாளர் திணைக்களத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திலும் மனுக்கள்
அளித்தும் இதுவரை எந்தவிதமான பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பலர் குடும்பச் செலவுகளையும், குழந்தைகளின் கல்வியையும் கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றார்கள்.
நிலுவை சம்பளங்கள்
எனவே, உரிய அமைச்சின் ஊடாக இந்தப்
பிரச்சினை விரைவாகத் தீர்க்கப்பட்டு, தங்களுக்குரிய நிலுவை சம்பளங்கள்
வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.