Courtesy: Thaventhiran
இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுநருமான
சனத் ஜெயசூரிய கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்டு மைதானத்தை பார்வையிட்டுள்ளார்.
புதிய திட்டம்
அவர் இன்று (11.04. 2025) பிற்பகல் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, மைதானத்தை புற்தரை
மைதானமாக மாற்றி கிளிநொச்சி மாவட்டத்தின் துடுப்பாட்டத்துறையை வளர்க்கும்
நோக்குடன் மைதானத்தை பார்வையிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலையின் முதல்வர் சவரி
பூலோகராஜா மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தைச் சேர்ந்தோரும் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.








