மட்டக்களப்பில் (Batticaloa) இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் தெய்வாதீனமாக காப்பற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (04) மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – நாசிவன்தீவு கடலில் மூழ்கிய ஏழு வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
காவல் பிரிவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை காவல் பிரிவிலுள்ள காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம்
ஒன்றின் உறவினர்கள் உள்ளிட்டோர் சம்பவதினமான நேற்று (05) நாசிவன் தீவு
கடற்கரைபகுதிக்கு சென்று கடலில் நீராடியுள்ளனர்.

இதன் போது ஏழு வயதுடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சிறுவர்களும் கடல் நீரில்
மூழ்கியுள்ளனர்.
போதனா வைத்தியசாலை
இதையடுத்து, நீராடிக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி மட்டு போதனா
வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த பெற்றோர் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமையினால் இந்து அனர்த்தம்
ஏற்பட்டுள்ளதுடன் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதையடுத்து தெய்வாதீனமாக உயிர்
தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

