முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாழைச்சேனையில் தாக்கப்பட்ட பேருந்து நடத்துனர்: நீதி கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரால் தாக்கப்பட்ட இலங்கைப் போக்குவரத்தச் சபை நடத்துனர் நீதி கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதம் நேற்றையதினம் (27) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபை வாழைச்சேனை சாலையில் பேருந்து நடத்துநராகக்
கடமையாற்றும் அபூதாலிப் முஹம்மது ஹிஸாம் என்பவரே ஜனாதிபதியின் கவனத்திற்கு
தனது முறைப்பாட்டைக் கொண்டு சென்றுள்ளார்.

தாக்குதல்

அந்தக் கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2025-01-22ஆம் திகதி எங்களது பேருந்து வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கு
சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

வாழைச்சேனையில் தாக்கப்பட்ட பேருந்து நடத்துனர்: நீதி கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் | Sltb Director Letter To President Seeking Justice

அன்றைய தினம் பிற்பகல் 4.30 மணி, எமக்கு
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணிக்கும் நேரமாகும். இந்தநிலையில், எமக்குரிய
நேரத்தில் எமது பேருந்து வண்டிக்கு முன்னால் மற்றுமொரு தனியார் பேருந்து,
அந்த இடத்தில் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றிக் கொண்டிந்தார்கள்.

அந்தநேரம், நான் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிக்கொண்டிருந்தேன். அப்போது தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநர் மற்றும்
இன்னும் ஒருவருமாக மூன்று பேர் எமது பேருந்திற்குள் ஏறி வந்து எனக்கு தலையில்
அடிக்க முற்பட்டனர்.

அப்பொழுது நான் தடுத்ததேன்.அடி எனது கையில் பட்டதோடு,
இன்னுமொருவர் பொல்லால் எனது தலையில் அடித்து பின்பு என்னை பேருந்திலிருந்து வெளியில் இழுத்தெடுத்து தாக்கினார்.

தாக்கியவர்கள் என் கையிலிருந்த பயணச்சீட்டு இயந்திரத்தையும் பறித்தெடுத்து என்
கையிலிருந்த 2200.00 ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு தப்பியோடி
விட்டனர்.

ஜனாதிபதிக்கு கடிதம்

அதன் பின்னர் என்னை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக
சிகிச்சைக்காக மட்டக்களப்பிற்கு மாற்றி கடந்த 2025-01-24 ஆம் திகதி மாலை
வீட்டிற்கு வந்தேன். அவர்கள் என்னைத் தாக்கியதில் எனது இடது தோள் பட்டையில்
வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறினார்கள்.

வாழைச்சேனையில் தாக்கப்பட்ட பேருந்து நடத்துனர்: நீதி கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் | Sltb Director Letter To President Seeking Justice

தற்போது இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கிணங்க தனியார் பேருந்து வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர். மற்றைய இருவரையும் கைது செய்யவில்லை.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே எமது சாலை பேருந்து சாரதி,
நடத்துநர்களோடு பிரச்சினைப்பட்டுள்ளனர். அதற்கான முறைப்பாடும் உள்ளது. இவர்கள்
அடிக்கடி இந்த வழிப்பாதையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றவர்கள்.

இது இவ்வாறிருக்க, இதுவரையில் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து வாழைச்சேனை
சாலையால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அத்தோடு சாலை முகாமையாளர்
தனியார் பேருந்து நபர்களோடு சமாதானமாகுமாறு என்னிடம் கூறுகின்றார்.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு நீதி பெற்றுத்தருமாறு தங்களை மிகத்
தயவாய் கேட்டுக்கொள்கிறேன் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.