ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் 7ஆம் திகதி காலை விசேட
அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவுத் திட்டம்
நவம்பர் மாதம் 7ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரைக்கு அனுமதி பெறுவதற்காக விசேட
அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ளது.
ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரை 2ஆம் வாசிப்பாகக் கருதப்படும்.
மொத்த செலவீனம்
2ஆம்
வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை
நடைபெறும். 14ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் மாதம்
15ஆம் திகதி ஆரம்பமாகும். வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி
நடைபெறும்.
தேசிய மக்கள் சக்தி அரசின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்
அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

