மார்ச் மாத பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்தை முன்னிட்டு சிறப்பு தொடருந்து சேவை ஒன்றை இயக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை வரை இந்த தொடருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதேவேளை, தொடர்புடைய பயணங்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
பாடாலை விடுமுறை
இந்த நிலையில், 2024 (2025) சாதாரண தர பரீட்சை நேற்று நிறைவு பெற்றிருந்த நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் பாடாலை விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்துக்கது.