2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டை விட 5.8% அதிகரித்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அது 4,212 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு, இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 3,978 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகி இருந்தது.
பல மில்லியன் அமெரிக்க டொலர்
இந்த நிலையில் கடந்த ஆண்டை விட சேவை ஏற்றுமதி 10.88% அதிகரித்து 887.04 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பொருட்களின் ஏற்றுமதி 4.6 சதவீதம் அதிகரித்து 3.32 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.