இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர (Jayananda Warnaweera) தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார்.
1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஒரு சிறந்த பந்து வீச்சாளரான அவர், 1994 இல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது 32 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 6 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
சர்வதேச மைதானத்தின் கண்காணிப்பாளர்
ஓய்வுக்குப் பிறகு, ஜெயானந்த வர்ணவீர பல்வேறு நிர்வாகப் பணிகளை ஏற்றுக்கொண்ட அவர் காலி சர்வதேச மைதானத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார்.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறுதிச் சடங்கு தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

