நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து
சேவைகளை படிப்படியாக வழமைக்கு கொண்டுவர தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, நாளைய தினம் (30) மூன்று முக்கிய தொடருந்து பாதைகளில் மொத்தமாக 19
சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடருந்து சேவைகள்
அதற்கமைய, கரையோர மார்க்கத்தில் 13 தொடருந்து சேவைகளையும், புத்தளம்
மார்க்கத்தில் 5 சேவைகளையும், களனிவெளி மார்க்கத்தில் ஒரு தொடருந்து சேவையையும்
முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


