எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் யாழ். கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். (Jaffna) பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றைய தினம் (09.11.2025) கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் முன்னிலை
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு படகையும்
அதிலிருந்த 14 கடற்றொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதான கடற்றொழிலாளர்கள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

