சுற்றுலாத்துறை மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருவாய் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 362 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 269 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது.
அத்துடன் இந்த ஆண்டின் முதல் 44 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.