மனுக்குலத்தின் பாவங்களைப் போக்க, கடவுள் மனுவுருவெடுத்து சிலுவை மரணம் ஏற்றார்.
அவர் நமக்காக ஏற்ற சிலுவைப் பாதை, மனுக்குல மீட்புப் பாதையாக அமைந்தது.
இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்களை அனுபவித்து, சிலுவையில் உயிர் துறந்த நிகழ்வுகளை நினைவு கூரும் முகமாக கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தால் 29ஆவது வருடமாக ஒழுங்கு செய்யும் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை இன்று பிற்பகல் 3.15 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு புதிய செட்டி வீதியில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி உள்ளது.
இத் திறந்தவெளி பெரிய சிலுவை பாதையில் கலந்து கொண்டு இத்தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்.