முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தோட்ட அதிகாரிகளால் தாக்கப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி கோரி போராட்டம்

தோட்டத்தில் பொது முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரால்
தாக்கப்பட்டுள்ள தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி வழங்கப்பட
வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் இன்று
(27.01.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டகலை மவுண்ட்வேர்ணன் தோட்ட தொழிற்சாலைக்கு முன்னால் திரண்ட தோட்ட
சேவையாளர்கள், மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு
செய்தும், அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்கள். 

பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

எனவே, க்ளீன் சிறீலங்கா போன்ற வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்க வேண்டுமானால்
பக்கச்சார்பாக செயல்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தோட்ட அதிகாரிகளால் தாக்கப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி கோரி போராட்டம் | Struggle Justice Plantation Assistant Field Worker

இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி
ஆகியோருக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதியே மேற்படி தாக்குதல் நடந்துள்ளதுடன் பொது முகாமையாளரும், உதவி
முகாமையாளரும் இணைந்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட உதவி வெளிக்கள
உத்தியோகத்தர்கள் இருவரும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று
வருகின்றனர் என்று இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் எஸ்.
இளையராஜா தெரிவித்துள்ளார்.

தாக்குதல்

நான்கு நாட்கள் கடந்தும், இது தொடர்பில் பொலிஸார் மந்த கதியிலேயே
செயற்பட்டுள்ளனர் எனவும், இன்றைய தினமே சந்தேக நபர்களை நீதிமன்றத்தில்
முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர்
கூறியுள்ளார்.

தோட்ட அதிகாரிகளால் தாக்கப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி கோரி போராட்டம் | Struggle Justice Plantation Assistant Field Worker

பொதுமுகாமையாளர் தலைமறைவாகி இருப்பதற்கு பொலிஸார் உடந்தையாக இருந்தனரா என்ற
சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.