2012ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சுப்ரீம்சட் செயற்கைக்கோள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று(06) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் சில தவறான தகவல்கள் இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சுப்ரீம்சட் செயற்கைக்கோள் தொடர்பில் பிரதமர் அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படியாகக் கொண்டே உரையாற்றியிருந்தார்.
சுப்ரீம்சட் நிறுவனத்தின் வருமானம்
பிரதமர் வழங்கிய தகவல்களின்படி, சுப்ரீம்சட் நிறுவனம் ஈட்டிய வருமானம், குறித்த செயற்கைக்கோளால் ஈட்டப்பட்டதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு அந்த நிறுவனம் ஒரு செயற்கைக்கோளை ஏவுவதற்காக பன்னிரண்டு பில்லியன் ரூபாய்களைப் பெற்றது.
ஆனால், அந்தப் பகுதி 2014-2015 கணக்கியல் பதிவுகளில் இல்லை” என தெரிவித்துள்ளார்.