யாழ்ப்பாணம்- இணுவில் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸாரால் நேற்று(11) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவரிடமிருந்து 110 மில்லிகிராம் ஹெரோயின்
மீட்கப்பட்டுள்ளது.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

