யாழில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் கைதாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அரியாலை பகுதியைச் சேர்ந்த 24
வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு நடவடிக்கை

குறித்த சந்தேகநபர் நெல்லியடியில் கடை ஒன்றினை உடைத்து 6 இலட்சம் ரூபா பணம், கமரா சேமிப்பகம்
என்பவற்றை திருடியமை, யாழில் கருவாட்டுக்கடை ஒன்றினை உடைத்து அங்கு திருடியமை,
சாவகச்சேரியில் தொலைபேசி கடை ஒன்றினை உடைத்து 96 ஆயிரம் ரூபா பெறுமதியான
பொருட்கள் மற்றும் 2 கைபேசிகளை திருடியமை விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும், உப பொலிஸ்
பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பொருட்கள்

இதன்போது திருடப்பட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

