யாழ்ப்பாணத்தில்(Jaffna)இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில்
இன்றையதினம்(07.03.2025) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
அத்துடன், வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டதுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி – கஜிந்தன்