இலங்கை மக்களுக்கான நிவாரண பொருட்கள் திருகோணமலை அஷரப் இறங்குதுறையை வந்தடைந்துள்ளது.
குறித்த நிவாரண பொருட்கள் நேற்று (08) நாட்டை வந்தடைந்துள்ளன.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தூத்துக்குடி
துறைமுகத்தில் இருந்து இந்த நிவாரண பொருட்கள் வந்துள்ளன.
நிவாரண பொருட்கள்
இந்தநிலையில் சீனி, பருப்பு மற்றும் பால் பவுடர் தூத்துக்குடி
துறைமுகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு
ஜீ எம் ஹேமந்த குமார ஆகியோர் யாழ்ப்பாணத்தின் இந்திய
துணைத் துதுவர் சாய் முதளியிடம் இருந்து உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

