முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு : போராட்டத்தில் குதித்த மக்கள்

திருகோணமலை (Trincomalee) திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு
சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு
முன்பாக  இன்று (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை இந்துக்கள் சார்பில் பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை
வெளிப்படுத்தி இருந்தனர்.

சமூக வலைத்தளங்கள்

கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் ஆண்டாண்டு
காலம் பழமை வாய்ந்த பல நகைகள் திருட்டுப் போய் உள்ளதாகவும் இது தொடர்பில் ஆலய
பரிபாலன சபையினர் பொடுபோக்காக இருப்பதாகவும் திருக்கோணேஸ்வர ஆலய திருட்டு
தொடர்பில் துரித கவனம் செலுத்தி குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய
கயவர்களை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு
கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக
திருவண்ணாமலை இந்து மக்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து
தெரிவித்திருந்தனர்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு : போராட்டத்தில் குதித்த மக்கள் | Thali Missing From Thirukoneswara Temple

இந்த திருகோனேஸ்வரர் ஆலய திருட்டு சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமான் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

திருட்டு சம்பவங்கள் 

நாட்டில் ஒரு வணக்கஸ்தலம் ஆலயம் ஒன்றில் இவ்வாறு திருட்டு சம்பவங்கள்
இடம்பெறும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனவும் குறித்த திருட்டு சம்பவம்
தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு தான்
பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு : போராட்டத்தில் குதித்த மக்கள் | Thali Missing From Thirukoneswara Temple

அத்தோடு, இந்த திருட்டு சம்பவம் திருக்கோணேஸ்வர ஆலயத்தில்
இடம்பெறும் இரண்டாவது சம்பவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், இனி இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெறாத வகையில் ஏனைய பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளவாறு நம்பிக்கையாளர்
சபை ஒன்று உருவாக்கப்பட்டு குறித்த சபையின் ஊடாக திருக்கோணேஸ்வரர் ஆலய அபிரதேச செயலாளரிடமிருந்து நிர்வாக சபையினருக்கு ஆரம்பத்திலிருந்து ஒப்படைக்கப்பட்ட கணக்கெடுப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அதனை சரியான முறையில் வழி
நடத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் தான் சரியான நடைமுறை ஒன்றை கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.