திருகோணமலை – சம்பூர் காவல் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய செய்ததாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈச்சிலம்பற்று காவல்துறையினரால் நேற்று (14.12.2025) குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விசாரணை
டிக்டொக் மூலம் ஒரு இளைஞர் குறித்த பெண்ணிடம் தொடர்பாகி சந்தித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த இடத்திற்கு ஏனைய நண்பர்கள் வந்த பின்னர் குறித்த பெண் அத்துமீறலுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

