பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தனியார் உறுப்பினர் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது இன்று நாடாளுமன்றத்தில் எதிர் தரப்பு எம்.பிக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல் சட்டம்
‘1988 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான மனு’ என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சமர்ப்பித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எம். நிஜாம் காரியப்பர் இந்தப் பிரேரணையை வழிமொழிந்துள்ளார்.

