வவுனியாவில் இலஞ்சம் பெற்ற காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறுப்பதிகாரி
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் காவல் நிலைய
பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு
வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று பூவரசங்குளம் காவல் நிலையத்திற்கு வருகை தந்த இலஞ்ச
ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி
ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்பட்ட போது கைதுசெய்துள்ளனர்.

காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை
காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று (22) வவுனியா நீதிமன்றில் முற்றப்படுத்தப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

