ஹம்பாந்தோட்டை(hambantota) பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் பத்தேகம விரைவுச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கிமீ 80. 9 மைல் கல்லில் இடம்பெற்றுள்ளது.
கவலைக்கிடமான மகன்
இவ்விபத்தில் 16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு மகன்களும் அவர்களது தாயும் காயமடைந்துள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற போது 21 வயதுடைய மகனே காரை ஓட்டி வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து
மாத்தறையில்(matara) இருந்து கொழும்பு(colombo) நோக்கி வந்த கார் வீதியின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதுடன் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பேருந்திலும் மோதி விபத்துக்குள்ளானது.

அவ்வழியாகச் சென்ற சாரதிகள் காரில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/the-terrible-accident-on-the-southern-expressway-1724332054

