முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பேருந்து நடத்துனருக்கு அரசாங்கம் கொடுத்த தண்டனை

புதிய இணைப்பு

நுவரெலியா (Nuwara Eliya) பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பேருந்திவ் ஏற்ற மறுத்த  நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர்  நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இ.போ.ச பேருந்து நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும்வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முதலாம் இணைப்பு

ஹட்டன் (Hatton) அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் கினிகத்தேனை கடவளை தமிழ் பாடசாலை மாணவர்களைப்
பேருந்தில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேறுமாறு நடத்துநர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரச பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை பேருந்து நடத்துநரிடம் காண்ம்பிக்கும் போது பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு நடத்துநர் தெரிவிப்பதாக மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாவலபிட்டியில் இருந்து கினிகதேனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரச பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

“இது அரச பேருந்து நடத்துநரின் சொந்த பேருந்து அல்ல, பாடசாலை மாணவர்களாகிய நாங்கள்
பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம் எமக்கு பேருந்தைவிட்டு வெளியேற முடியாது“ என மாணவர்கள் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த பேருந்து நடத்துநர், “ஆம் இது என்னுடைய பேருந்து நீங்கள் எல்லாம் பேருந்தைவிட்டு இறங்குங்கள்” என வலியுறுத்தியதாக வெளியிடப்பட்ட காணொளி ஊடாக தெரியவந்துள்ளது.

தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ந்தும் இது போன்ற அநீதிகள் இடம்பெற்று வருவதுடன், இது தொடர்பில் அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

you may like this 


https://www.youtube.com/embed/vERPwmgpAGU

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.