அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டத்திற்கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்படி பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டு மூன்றாம் தவணை முடிவடைந்து மீண்டும் தொடங்குவதற்கான திகதிகளை கல்வி அமைச்சசு அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து அரசு பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையில் முதலாம் கட்டம் நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 07) முடிவடைகிறது.
பாடசாலை ஆரம்பம்
இதுவேளை, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08 ஆம் திகதி தொடங்கும்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24 ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்கும்.

