எதிர்வரும் 21 ஆம் திகதி மொட்டுவும் ஐக்கிய தேசியக் கட்சியும் நுகேகொடைக்கு வருவது மக்களுக்காக அல்ல, மாறாக மீண்டும் தங்களுக்கான அதிகாரத்தைக் கோருவதற்காகவே என்று முன்னணி சோசலிசக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவை 2021 ஆம் ஆண்டு மக்கள் விரட்டியடித்ததாகவும், எனவே 21 ஆம் திகதி பேரணி நாட்டிற்குப் பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேரணியில்
கலந்து கொள்ளப் போவதில்லை
பொதுப் பேரணியில் தான் சேரப் போவதில்லை என்றும், மக்கள் அங்கு வந்து இந்தக் குழுவை கூச்சலிட்டு விரட்டியடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை குறித்த பேரணியில் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

