யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 25 வயதிற்குட்பட்ட யுவதி உட்பட இரு இளைஞர்கள் அடங்கலாக மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை உடமையில்
வைத்திருந்த மூவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
கைது நடவடிக்கையின் போது 09 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

