புகையிரத திணைக்களத்தின் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை-மருதானை இடையிலான தொடருந்து மார்க்கத்தில் சமிக்ஞை கட்டமைப்பு இன்று(16) மாலை செயலிழந்துள்ளது.
தொடருந்து சேவைகள்
அதன் காரணமாக மருதானை மற்றும் கோட்டை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து புகையிரத மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமிக்ஞை விளக்குத் தொகுதியை சீரமைக்கும் பணியில் புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

