நீதிமன்ற உத்தரவுகள் அல்லது சட்ட சிக்கல்கள் இல்லாத அனைத்து நிலங்களையும்
விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதென்று முடிவு
செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி
அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – முத்து நகர் காணிப் பிரச்சினை குறித்து, பிரதி அமைச்சர் நேற்று (14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “முத்து நகர் நிலப் பிரச்சினை ஜூலை 29, 2025 அன்று அடிப்படையில்
தீர்க்கப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு பயன்படுத்த..
மாவட்ட செயலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு முன்பே
இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுகள் அல்லது சட்ட சிக்கல்கள் இல்லாத அனைத்து நிலங்களையும்
விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்த நிலத்தில் சுமார்
10வீத சூரிய சக்தி நிறுவனங்கள் வேலை செய்யத் தொடங்கிய இடமாகும். அந்தப் பகுதிகளை
மட்டுமே பயன்படுத்த முடியாது, அது தற்போதுள்ள நீதிமன்ற உத்தரவுகளால் மட்டுமே.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி வழங்கவும், நிலங்களை திருப்பித் தரவும்
ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக அறிந்த, ஒரு குழு இன்னும் மக்களை தவறாக
வழிநடத்த முயற்சிப்பதாகவும், அவர்களின் நோக்கம் பிரச்சினையைத் தீர்ப்பது அல்ல,
நாட்டில் ஸ்திரமின்மையை உருவாக்குவதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறான தகவல்களால் ஏமாற வேண்டாம் என்றும், விவசாயிகளின்
வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும், சட்டத்தை மதிக்கும் மற்றும் நாட்டின்
ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நிரந்தர தீர்வை வழங்க எடுக்கப்படும்
நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்றும்,
இறுதியாக அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

