திருகோணமலை – மூதூர், தஹாநகரில் பெண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் சக்திவேல் ராஜகுமாரி
(74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் மகள் வெட்டு
காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் – ஹஸ்பர்