யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர்
காணாமல் போயுள்ளனர்.
40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றையதினம் கடற்றொழிலுக்கு படகு ஒன்றில்
சென்றுள்ளனர்.
இவ்வாறு தொழிலுக்கு சென்ற இருவரும் இதுவரை திரும்பி வரவில்லை.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் இணைந்து
ஈடுபட்டு வருகின்றனர்.


