ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) 8.3 மில்லியன் டொலரை, பேரிடரின் பின்னர் ஆபத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவசர, உயிர்காக்கும் மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள்
பாதிக்கப்பட்டவர்களில் கர்ப்பிணிப் பெண்கள் 22,570 மற்றும் 193,770 வயதான பெண்கள் அடங்குவதோடு 520,000 இளம் பெண்கள் ஆவர்.
வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடனடித் தேவைகளுக்கு UNFPA, இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட்டு வருகிறது.
பொது அவசரநிலை அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அத்தியாவசிய பராமரிப்பு தொடர்வதை உறுதி செய்வதற்காக 1,220 மகப்பேற்று கருவிகளை அனுப்பியுள்ளது.

ஆனால் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைவதால், பெண்கள் மற்றும் சிறுமிகள் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதி செய்ய அவசர நடவடிக்கைக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான UNFPA இயக்குநர் புண்ட்ஷோ வாங்கால் கூறினார்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், வயதான பெண்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட 208,400 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உயிர்காக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள்,
பாலின அடிப்படையிலான வன்முறை தடுப்பு மற்றும் மறுவாழ்வு, மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவற்றை வழங்க அவசரகால வளங்களைத் திரட்டுவதன் மூலம் UNFPA அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.
[CE9DBPI ]

